Wednesday, February 16, 2005

சுனாமி

ஆழிப் பேரலையே
அடித்ததென்ன எங்களையும்

சுனாமி எனும் பெயர்கொண்டு
பூமியில் பாதியை அழித்ததென்ன

சிக்கிவிட்ட சில்லறைபோல்
சிதறியதே சிந்தனைகள்

கொண்டுவந்த சுமைகளை
சுழுக்கெடுத்துவிட்டாய்

அப்போது எம் வேதனை தெரியவில்லையா?
இப்போது உன் கொடுமை புரியவில்லையா?

சுனாமிப் பேரலையே
சுற்றத்தைக் கொன்றதுமேன்

ஓங்கி அலையடித்து
ஊரை அழித்ததுமேன்

உறக்கம் கலையுமுன்னே
மக்கள் உயிரைப் பறித்ததுமேன்

பச்சைப் பாலகர்கள் செய்த
பாவமென்ன சொல்லு

மிச்சமேதுமின்றி
குடும்பங்கள் மறைந்தனவே

பேயாக வந்த கடலலையால்
பிணமானோம்

ஆற்ற முடியவில்லை - மனம்
ஆறாத் துயரில்
மறக்க முடியவில்லை - இன்னும்
ஈர நினைவுகள்

(நிசாந்தனின் மறைவை நினைத்து எழுதியது)

- சதீஸ்காந்தன்
(வகுப்பு 8, கதிரொளி சிறுவர் இல்லம்)
01/2005

2 Comments:

At 11:41 AM, Blogger சுடரகன்: சிவா முருகையா said...

This comment has been removed by a blog administrator.

 
At 3:53 PM, Blogger சுடரகன்: சிவா முருகையா said...

தம்பி சதீஸ்,
“சிக்கிவிட்ட சில்லறைபோல்
சிதறியதே சிந்தனைகள்”

இது நல்ல காட்சிப்படுத்தல் உள்ள கவிதை வரி. இப்படி காட்சி அமைப்புடன் கவிதைகள் எழுதப்பட்டால் தான் மக்களின் மனங்களை அந்தக் கவிதைகளால் தொடமுடியும். நடந்த ஓரு விடயத்தை எல்லாரும் சொல்வது போல நீங்களும் சொன்னால் அது செய்தி சொல்வது போல் வந்து விடும். ஆகவே அந்த விடயம் உங்களின்; மனதில் எப்படி விளங்கப்பட்டுள்ளது (நடந்ததை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்) என்பதை இயன்ற வரை காட்சி அமைப்புடன் எழுத முயற்சி செய்யுங்கள். யாருக்காவது கவிதையில் சவால் விடுவதென்றால் கூட சரியான காட்சி அமைப்பு இல்லை எனில் ஊர்வலங்களில் வரும் கோசம் போல் வந்து விடும்ஃ மேலே உள்ள உங்கள் கவிதை வரிகள் உங்களிடம் நல்ல கவிதைகள் எழுதுவதற்கான நல்ல ஆரம்பம் இருப்பதைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள.; தொடருங்கள்.

சுடர் முருகையா

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

ஏன் இந்தக் கோபம்?

கடல் அன்னையே உன் மடியில்
கனவுடனே மிதந்தோமே
காலனாய் நீ தோன்றி
கடுகதியாய் உயிர் குடித்ததென்ன

பெற்ற அன்னையரை, வாய் பேசா குழவியரை
சுற்றமென இருந்த அப்பப்பா அம்மம்மாவை
மாமாவை மாமியரை அண்ணாவை தம்பியரை
சடுதியாய் உயிர் மாய்த்த மர்மமென்ன

அதிகாலை வேளையது சுறுசுறுப்பாய் இருக்கையிலே
சற்றும் எதிர்பாரா சங்காரம் செய்துவிட்டாய்
ஏழைகள் வாழ்வுதனை ஏற்றி வைத்த கடலம்மா
இப்போ மட்டும் எம்மை எட்டி உதைத்தனேம்மா


கட்டிய வீடெங்கே கும்பிட்ட கோயிலெங்கே
தாவி விளையாடிய குழந்தைகள்தான் எங்கே
சுற்றிலும் இருந்த சுற்றமெங்கே சூழலெங்கே
எல்லாம் முடித்துவிட்டு கடலே இப்போது தூக்கமென்ன

கறையான் அரித்த மரக்கட்டைகளாய்
நாம் வாழும் வேளையில்
இயற்கை அன்னையே உன் கோரமுகம் காட்டி
எம்மைச் சிதைத்ததென்ன

எங்கள் வாழ்வில்தான் சுற்றமில்லை என்றிருந்தோம்.
மற்றவர்களையும் இப்போ எங்களைப்போல் ஆக்கிவிட்டாய்
எவர்தான் எம்மீது வக்கிரங்கள் புரிந்தாலும்
சற்றும் சளைக்காமல் மீண்டும் நாமுயர்வோம்

- மதனசேகரம்
(வகுப்பு 8, விபுலானந்தா சிறுவர் இல்லம்)
01, 2005

1 Comments:

At 3:50 PM, Blogger சுடரகன்: சிவா முருகையா said...

"கட்டிய வீடெங்கே கும்பிட்ட கோயிலெங்கே
தாவி விளையாடிய குழந்தைகள்தான் எங்கே
சுற்றிலும் இருந்த சுற்றமெங்கே சூழலெங்கே
எல்லாம் முடித்துவிட்டு கடலே இப்போது தூக்கமென்ன

கறையான் அரித்த மரக்கட்டைகளாய்
நாம் வாழும் வேளையில்
இயற்கை அன்னையே உன் கோரமுகம் காட்டி
எம்மைச் சிதைத்ததென்ன"

தம்பி மதன்

உங்களின் இந்தக் கவிதை வரிகள் எம் மண்ணின் சோகத்தை அப்படியே வெளிப்படுத்துவனவாக இருக்கிறன. அவ்வரிகளில் கறையான் அரித்த மரக்கட்டைக்கு எம் ஈழ மக்களின் வாழ்வை ஒப்பிட்டது அருமையாக இருந்தது. உங்கள் கவிதை எழுதும் திறனை இன்னும் வளர்பதற்கும்ää கவிதையின் காட்சிப்படுத்தல் திறனை வளர்பதற்கும் சில வளிமுறைகளைச் எழுதுகிறேன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1) ஒப்பீடுகள் : நீங்கள் எழுதிய “கறையான் அரித்த மரக்கட்டை போல் எம் வாழ்வு” என்ற வசனம் போன்றவை. இதில் உவமானம்: கறையான் அரித்த மரக்கட்டை
உவமேயம்: தமிழரின் வாழ்க்கை

2) குறியீடுகள் : நீங்கள் எழுதிய மேல் உள்ள வசனத்தில் உவமானத்தை மட்டும் கவிதையில் பயன்படுத்துவதே இப்போதைய காலங்களில் குறியீடாக சொல்கிறார்கள். இருந்தாலும் குறியீடு என்பது இன்னும் விரிவாகப் பார்கப்படக் கூடியது. அவற்றை நீங்கள் இன்னும் வளரும்போது அறிந்து கொள்வீர்கள். தொடர்ந்தும் மற்றவர்கள் எழுதிய கவிதைகளைப் படியுங்கள்: அப்போதும் இன்னும் விளக்கமாக அறிந்து கொள்வீர்கள்.
எடுத்துக்காட்டாகப் பார்;த்தால்
“கறையான் அரித்த மரக்கட்டை
இன்று கடலாலும் அடிபட்டு
உருக்குலைந்து போனது பார்”

இது தமிழரின் வாழ்வைத்தான் குறிக்கிறது என்பதை வாசிப்பவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.

இதைவிட சில பொருட்களும் சம்பவங்களும் கூடக் குறியீடுகளாக வரும்;. எடுத்துக்காட்டாக பிரிந்துபோன புரட்சிக் கவிஞன் பாவித்த பேனாவை அவனது நண்பன் எடுத்துக் கொள்கின்ற போது பேனா என்பது புரட்சியின் குறியீடாகவும்ää அதை நண்பன் எடுத்துக்கொண்;ட சம்பவம் நண்பனின் புரட்சியை தானும் தொடரப்போவதையும்; குறியிடுகிறது.

3) தற்குறிப்பேற்றம் : இயற்கையில் நடை பெறும் விடயங்களை நாம் சொல்ல வேண்டிய விடயத்துடன் சேர்த்து எமக்கு சாதகமாக (ஏற்றமாதிரி) பயன்படுத்தல்

எடுத்துக்காட்டாக பார்த்தால் மழை பெய்வது இயற்கை நிகழ்வு. அதையே
‘சுனாமி அழிவுகளால் கலங்கிய வானம் மழையாய் அழுதது.’
என்று எழுதினால் அது தற்குறிப்பேற்றம்.

இப்போதைக்கு இது போதும் இன்னும் வளர வளர மேலும் மேலும் அறிந்து கொள்வீர்கள்

சுடர் முருகையா.

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, February 09, 2005

இறந்தும் வாழ்வது



தாய் வயிற்றில் கருவாகி
தரணியில் வந்துதித்தால்
மண்ணடியில் எருவாகி
மாளவேண்டும் - இது நியதி

ஆனால்-

துன்பத்தில் இருப்போர்க்கு
துணிந்து நாம் உதவி செய்தால்

மற்றோர்க்கு தீங்கின்றி
நாமிங்கு வாழ்ந்திருந்தால்

நல்லன நினைத்து
நன்மைகள் செய்திருந்தால்

ஊன் மறைந்தாலும்
நாம் வாழ்வோம்


- க.டோதரன் (வகுப்பு 8 )
(மாணிக்கவாசகர் சிறுவர் இல்லம்)


நன்றி: உதவி



0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பூவிடம் கேட்பேன்

பூவே!
மலர்ந்து வண்டுக்கு
அமிர்தம் கொடுப்பாயா?

சூரியனைக் கண்டு
பூவே சிரிப்பாயா?

தென்றல் காற்றில்
குதூகலமாய் ஆவாயா?

தேனருந்தும் வண்டுகளை
வாவென்று அழைப்பாயா?

பூவே!
எனது அப்பா அம்மா
எங்கே என்றும் சொல்வாயா?




- விஸ்ணுகாந்தன் (வகுப்பு 8)
(விபுலானந்தா சிறுவர் இல்லம்)
நன்றி: உதவி

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பயில்வோம்

தேனிருக்கும் மலரினை
தேடி மொய்க்கும் வண்டு போல்

சீனியுள்ள இடத்தினை
நாடி ஊரும் எறும்பு போல்

பழம் நிறைந்த சோலையை
பார்த்துச் செல்லும் கிளி போல்

வளம் நிறைந்த நாட்டிற்கு
வந்து சேரும் மக்கள் போல்

பள்ளமான இடத்திற்கு
விரைந்து பாயும் வெள்ளம் போல்

நல்ல நல்ல நூல்கள்

நாடி நாமும் பயில்வோம்.


- எழில் (வகுப்பு )
(விபுலானந்தா இல்லம்)
நன்றி: உதவி

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

எப்போது?

அன்று தொட்டு இன்றுவரை அழிகின்ற எம் மக்கள்
கன்றிழந்து தாயிழந்து கனத்தவுயிரிழந்து
நின்று உயிர் வாழ்கிறார் நிற்க ஒரு கேள்வி
என்று தணியுமிந்த சமாதான தாகம் சொல்?

தந்தையினை இழந்தவர்கள் தாயைப் பிரிந்தவர்கள்
சந்தையிலே செல்விழுந்து சவங்களாய் கிடந்தவர்கள்
கந்தை துணியோடும் கால் வேறு கை வேறாய்
மந்தைகளாய் மரணித்துப் போனவர்கள்

வந்து விடுகிறேனென்று வாய் நிறையக் கூறிவிட்டு
சந்திகளெல்லாம் சடலமானவர்கள்
நொந்துருகி துயரத்தால் நொடியில் உடைந்தவர்கள்
அந்த நாள் தொட்டு அதிகரிக்கக் காணுகின்றோம்.

பள்ளிக்குச் செல்லும் பாலப் பருவமதில்
துள்ளித் திரியுமந்த துயரமறியா காலமதில்
வள்ளிக் கிழங்குண்டு வாழ்ந்த வரலாறிப்போ
கொள்ளிவால் பேய்கள் குடிகொண்ட காலமாச்சே

பேயாட்டம் போடும் யுத்த அரசியல்
பாராட்டப்படுகின்றது பாரறியும் சபை தன்னில்
மாறாட்டமில்லாது தமது மனம் திறந்து
கூறட்டும் சமாதனம்தான் வேண்டும் என்று

மேகங்கள் கூடி மின்னலிடி தோன்றி
இல்லங்கள் மீது தென்றல் அலை மோத
வெறியடங்கி யுத்தம் முடிந்துவிட
உண்மையான சமாதானம் மலர்வதெப்போ?

நாம் வாழ்வதெப்போ?

- கோ.பிரசாத் (வகுப்பு 10)
(விபுலானந்தா சிறுவர் இல்லம்)

நன்றி: உதவி

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

அன்பின் சிகரம் அன்னை

பத்துத் திங்கள் பாசமுடன் எம்மைச் சுமந்து
இவ்வுலகில் எமைப் பெற்றெடுத்தாள் அன்னை
நித்தம் நித்தம் எம் நினைவுகளுடனே - எம்
சித்தம் மகிழ்ந்திட சீருடனே வளர்ப்பவள் அன்னை

பாராட்டிச் சீராட்டிப் பாலூட்டி எம் மீது
தீராத அன்பைப் பொழிபவளே அன்னை
பாரினில் எம்மைப் பெற்றெடுத்த அன்னை
யாராலும் நிகர்க்க முடியா அன்பின் சிகரம்

அன்பினை இன்பத் தேனாக ஊட்டி
அவனியிலே எமக்கு நல்வழிகள் காட்டி
அன்புடனே எமை வாழவைப்பவனே அன்னை
அவனியில் அன்னையே அன்பின் சிகரம்

அறுசுவை உணவுகளை அன்புடனே ஊட்டி
பொறுப்புடனே பொறுமையோடு உலகு போற்ற
எமை வாழவைக்க அன்புடனே அரவணைத்து
அறிவுகள் பல சொல்வாள் அன்னை

அன்னைக்கு நிகர் அவனியில் யாரும் இல்லை
அன்னையின் அன்பிற்கு இல்லையொரு எல்லை
பண்புமிகு அன்புமிகு அன்னையை அன்றி
அன்பு கொண்டோர் யாருமேயில்லை



- ரதீஸ் (வகுப்பு-7)
(விபுலானந்த சிறுவர் இல்லம்)

நன்றி: உதவி

1 Comments:

At 2:40 AM, Anonymous Anonymous said...

Very good article. I astonish that that this kid at 12 years of age could write like this.

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

புதுயுகம் படைப்போம்

தலை குனிந்து வாழ்ந்த பேதையை
அடக்கமெனும் ஆயுதம் கொண்டு
அடக்கிவிட்டனர் !

அன்புக்கு அடிபணிந்த மடந்தையை
அடிமைச் சங்கிலி கொண்டு
பூட்டிவிட்டனர் !

இரக்கத்திற்கு மயங்கிய பேதையை
பரிவு எனும் தடவலினால்
தட்டிவிட்டனர் !

மலர்களாய் மணம் பரப்பிய மங்கையை
மலர் நுகரும் வண்டுகளால்
அழித்துவிட்டனர் !

பூமாதேவியாய் பொறுமை காத்த பெண்களோ
கல்லறைகளுக்கு காவலாகிவிட்டனர் !

கவிதைக்கு அழகு சேர்த்த கன்னியோ
கல்யாணச் சிறைக்குள் கைதியாக்கப்பட்டனள் !

இவ்வாறு-

பெண்களின் தன்மையை
பெண்மை என்ற பெயரில்
தரம் தாழ்த்திய சமுதாயத்தை
புறம் தள்ளி
புறப்படு பெண்ணே

புது யுகம் படைத்து
அடிமைகளாக மாண்ட
மடந்தைகளின் கல்லறைகளை
முற்றுகையிடுவோம்.


- விமலசாந்தி (வகுப்பு 9)
(யோகசுவாமி மகளிர் இல்லம்)

நன்றி: உதவி

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

யுத்தம்

விடியற்காலையில்
யன்னலைத் திறந்தபோது
இரத்த வெள்ளம்
வழிந்தோடியது.
நான் பார்க்க விரும்பியதோ
அதிகாலை
சூரியனைத்தான்.

கதவைத் திறந்தால்
வெளியே
இறந்த உடல்கள்தான்.
நான் காண விரும்பியதோ
அழகான
பூக்களைத்தான்.

என்ன நடக்கிறது?
அடுத்தவரிடம் கேட்டேன்.
யுத்தம்.
பதில் வந்தது.

வெளியே போக
முடியவில்லை.


-விஜிகலா (வகுப்பு 9)
(யோகசுவாமி மகளிர் இல்லம்)

நன்றி: உதவி

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.