பூவிடம் கேட்பேன்
பூவே!
மலர்ந்து வண்டுக்கு
அமிர்தம் கொடுப்பாயா?
சூரியனைக் கண்டு
பூவே சிரிப்பாயா?
தென்றல் காற்றில்
குதூகலமாய் ஆவாயா?
தேனருந்தும் வண்டுகளை
வாவென்று அழைப்பாயா?
பூவே!
எனது அப்பா அம்மா
எங்கே என்றும் சொல்வாயா?
- விஸ்ணுகாந்தன் (வகுப்பு 8)
(விபுலானந்தா சிறுவர் இல்லம்)
நன்றி: உதவி
0 Comments:
Post a Comment
<< Home