இறந்தும் வாழ்வது
தாய் வயிற்றில் கருவாகி
தரணியில் வந்துதித்தால்
மண்ணடியில் எருவாகி
மாளவேண்டும் - இது நியதி
ஆனால்-
துன்பத்தில் இருப்போர்க்கு
துணிந்து நாம் உதவி செய்தால்
மற்றோர்க்கு தீங்கின்றி
நாமிங்கு வாழ்ந்திருந்தால்
நல்லன நினைத்து
நன்மைகள் செய்திருந்தால்
ஊன் மறைந்தாலும்
நாம் வாழ்வோம்
- க.டோதரன் (வகுப்பு 8 )
(மாணிக்கவாசகர் சிறுவர் இல்லம்)
நன்றி: உதவி
0 Comments:
Post a Comment
<< Home