பயில்வோம்
தேனிருக்கும் மலரினை
தேடி மொய்க்கும் வண்டு போல்
சீனியுள்ள இடத்தினை
நாடி ஊரும் எறும்பு போல்
பழம் நிறைந்த சோலையை
பார்த்துச் செல்லும் கிளி போல்
வளம் நிறைந்த நாட்டிற்கு
வந்து சேரும் மக்கள் போல்
பள்ளமான இடத்திற்கு
விரைந்து பாயும் வெள்ளம் போல்
நல்ல நல்ல நூல்கள்
நாடி நாமும் பயில்வோம்.
- எழில் (வகுப்பு )
(விபுலானந்தா இல்லம்)
நன்றி: உதவி
0 Comments:
Post a Comment
<< Home