Thursday, November 15, 2007

மழை


நீல வானம் இருண்டது.
நெடிய மேகம் திரண்டது.
மேளம் போல இடித்தது.
மின்னல் வானில் வெடித்தது.

சீறிக் காற்றும் எழுந்தது.
சேர்ந்து மழையும் பொழிந்தது.
பாறி மரமும் வீழ்ந்தது.
பாய்ந்து வெள்ளம் வழிந்தது.

ஆறாய் நீரும் பாய்ந்தது.
அருவியாகப் பரந்தது.
சேறாய் வயலும் நிறைந்தது.
செந்நெல் பூத்துச் சிரித்தது.

வரண்ட மண்ணும் நனைந்தது.
செடியும், கொடியும் தழைத்தது.
இருண்ட வாழ்வு அகன்றது.
எல்லோர் மனமும் குளிர்ந்தது.

- சுபாசினி
(சக்தி சிறுவர் இல்லம்)
7.2005
Image Courtesy

Labels:

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.